Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தால்…! முன்னுரிமை இல்லை…. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி  டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு மணம்  புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காத அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அரசின் உத்தரவுகளை மீறிய செயல் மட்டுமல்லாமல், சமூக நீதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசு பணியாளர் தேர்வு ஆணையம் உட்பட பிற தேர்வு நடைமுறைகளிலும் கலப்பு மனம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், 7372 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனுவானது இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரனைக்கு வந்தபோது, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிநியமனங்களில் மட்டுமே கலப்பு மனம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் கலப்பு மனம் புரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும்,  இது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  மனுதாரர் கலப்பு மணம் புரிந்தவர் அல்ல என்பதால், இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை தகுதி இல்லை எனவும், பணி விதிகள் சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |