ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் ஆரப் போடுவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் திரு அபுபக்கர் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.