Categories
சென்னை மாநில செய்திகள்

“தாலி கட்டுவேன், இல்லேனா கொலை விழும்”…. சென்னையில் அடுத்த ஷாக்…..!!!!

சென்னையில் நேற்று முன்தினம் சத்யா ஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியை சதீஷ் என்ற 23 வயது இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.இதனைத் தொடர்ந்து சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை (18) கொலை செய்ய முயன்றுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ரஷீத் (28). மாணவியை காதலிப்பதாகவும், என்னைக்கு இருந்தாலும் நான் தான் தாலி கட்டுவேன், இல்லாவிட்டால் கொலை விழும் என மிரட்டியுள்ளார்.மாணவியின் தாய் அளித்த புகாரின் பெயரில் அந்த நபரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சைக்கோ போல மிரட்டிவிட்டு சென்ற வாலிபர் ரஷீத் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |