பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கூடிய விரைவில் தமிழ்நாட்டு மருமகள் ஆவேன் என்று கூறியுள்ளார்.
கன்னடத் திரையுலகின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து தெலுங்கில் அவர் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
மேலும் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தனக்கு தமிழ்நாட்டு கலாச்சார மிகவும் பிடித்து போனதால் விரைவில் தமிழ்நாட்டு மருமகள் ஆவேன் என்றும், தனக்கு தமிழ்நாட்டு உணவு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆகையால் நடிகை ராஷ்மிகா ஒரு தமிழரை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று பேசப்பட்டு வருகிறது.