கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வதற்கு சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :-
நான் கருத்துக்கணிப்புகளை நம்பவில்லை. கருத்துக்கணிப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதே திட்டமாக இருக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019