பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு , மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் துக்ளக் விழாவில், பெரியார் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், அதற்கான ஆதாரத்தைக் காண்பித்து பேசினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளன. இந்த நிலையில் ரஜினி காந்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து நடிகை குஷ்பூ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தவறோ, சரியோ. அது அவரின் தனிப்பட்ட கருத்து.
Right or wrong, it's a personal perception n acceptance..but I am glad to see @rajinikanth Sir standing firm on his ground. What we need now is honesty..fear cannot be the rule. Speak..speak what your hearts says. Everybody will have an opinion n you cannot please everyone👍👏🙏
— KhushbuSundar (@khushsundar) January 21, 2020
அவர் தனது நிலைப்பாட்டில், உறுதியாக இருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அனைவருக்கும் தேவையான ஒரே விஷயம் நேர்மை. பயத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள்… உங்கள் மனசு என்ன சொல்கிறதோ.. அதைப் பேசுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் குஷ்பூ, ரஜினியுடன் 168ஆவது படத்தில் நடித்து வருவதால் தான், இப்படி பேசுகிறார் என்று விமர்சனம் செய்தனர்.
Ada loosu pasanga..#Rajini sir kuda yerkanave nadichu mudichettenda..yennakku idhu pudhusa ille..yenda mutthaalnna prove pannuringe??
— KhushbuSundar (@khushsundar) January 21, 2020
இதைப்பார்த்து கடுப்பான குஷ்பூ, ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், ‘அட லூசு பசங்க.. நான் ரஜினி சார் கூட ஏற்கெனவே நடிச்சு முடிச்சுட்டேன்டா.. எனக்கு இது புதுசு இல்ல.. ஏன்டா முட்டாள்னு புரூவ் பண்றீங்க?’ என்று குறிப்பிட்டுள்ளார்.