பிரபல நடிகை மீரா மிதுன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பிரதமருக்கு டுவிட் செய்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை மீரா மிதுன். சர்ச்சையான மாடல் நடிகையான இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் யாரையாவது அடிக்கடி ஏதாவது அதிர்ச்சியான விமர்சனத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதே வழக்கம். இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்து கொள்வதாக ட்விட் செய்துள்ளார். மேலும் அதில், “சிலர் தொடர்ந்து தனக்கு துன்புறுத்துதல் கொடுப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே தான் இந்த தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.