சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட செயலாளர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு உணர்வு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.