ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி வரும் 28ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.