Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்… இதுதான் காரணமா?

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்..

திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவில் வசித்து வரும் 65 வயதான சேஷாலம் என்பவர் அப்பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்கள் இவருக்கும் குழந்தையில்லை. இதுவரையில் குழந்தை இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு சேஷாலம் தன்னுடைய மனைவியின் மேல் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் பலத்த தீ காயமைடைந்த மல்லிகா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தசம்பவம் குறித்து சேஷாலம் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்த திருப்பத்தூர் நகர போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தை இல்லாததால் எரித்துக் கொன்றதாக சொல்லப்படுகிறது.. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |