Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதை எடுத்து தாங்க….. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண் அளித்த புகார்….!!

நகை பறித்த கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இதனை அடுத்து அம்பேத்கர் நகரில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அம்மணம்பக்கம் கிராமத்தில் வசிக்கும் முருகன் – பானுப்பிரியா தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த தம்பதியினர் ராணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் ராணியை ஆட்கள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க கம்மல், மற்றும் மாட்டலை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ராணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் – பானுப்பிரியா தம்பதியினரிடமிருந்து தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெருமாள் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடியதும் இந்த தம்பதிகள் தான் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |