Categories
மாநில செய்திகள்

“பசியோடு தண்ணீருக்காக வந்த நாய்”….. மதுவை கொடுத்ததால் போதையில் தள்ளாடிய பரிதாபம்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோ பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிலர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பசியோடு ஒரு நாய்க்குட்டி வர அந்த நாய்க்கு ஒரு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி வைக்கிறார்.

அந்த நாய்க்குட்டி தண்ணீர் என நினைத்து மதுவை குடித்து விட்டது. மது குடித்ததால் நாய் குட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து விட்டது. அதன் பிறகு அவ்விடம் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த நாய்க்குட்டி அங்கிருந்து செல்ல எழுந்து நடக்கிறது. ஆனால் போதையின் மயக்கம் காரணமாக நாய்க்குட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை.

இருப்பினும் தரையில் விழுந்து விழுந்து எழுந்து நடந்து செல்கிறது. இந்த சம்பவத்தை மது குடித்ததில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாயில்லா ஜீவனுக்கு மதுவை ஊற்றி அதை ரசித்து கொடுமைப்படுத்திய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்களும் புகார் கொடுக்கப் போவதாக கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் செம்பியநல்லூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |