Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பாய் வீட்டு நெய் சோறு செய்வது எப்படி !!!

பாய் வீட்டு நெய் சோறு

தேவையானபொருட்கள் :

பல்லாரி – 2

சின்னவெங்காயம் –  4

தக்காளி – 1 சிறியது

பட்டை –  4

கிராம்பு – 6

ஏலக்காய் –  6

ரம்பை  இலை – 2

பச்சைமிளகாய் –  3

பாசுமதி அரிசி –  1  கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன்

புதினா ,கொத்தமல்லி இலை –  1  கைப்பிடியளவு

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 10

உப்பு –  தேவையான அளவு

நெய் சோறுக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில்  அரிசியை 20 நிமிடம்   ஊறவைக்க வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய் , ரம்பை  இலை , சின்னவெங்காயம் , வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வரவேண்டும் .  பின் தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பச்சை வாசனை  போனதும் புதினா ,கொத்தமல்லி இலை, தயிர், முந்திரி  சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் , உப்பு மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் 20  நிமிடங்கள்  தம் போட்டு , புதினா மற்றும் நெய் சேர்த்து இறக்கினால் சூப்பரான நெய் சோறு தயார் !!!

குறிப்பு :  1 கப் அரிசிக்கு 1  1/2 கப் தண்ணீர் சேர்க்கவேண்டும் .

Categories

Tech |