தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பெரிய தொகையை நன்கொடையாக பிரிட்டன் வழங்கியுள்ளது
கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பது நமது வாழ்நாளில் மிகவும் அவசரமான பகிரப்பட்ட பெரிய முயற்சி என நடைபெற இருக்கும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு பிரிட்டானியா நன்கொடையாளராக உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 483 மில்லியன் டாலர் ஆராய்ச்சிக்கு வழங்க இருபட்டதாக உறுதியளித்துள்ளது.
கொரோனா போரில் இருந்து வெற்றி பெறுவதற்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் அவர்களை சுற்றி அசைக்கமுடியாத கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சரியான தடுப்பூசியை உருவாக்கி அதிக அளவில் உற்பத்தி செய்வதன் மூலமே அதனை நம்மால் செய்ய முடியும். கொரோனா தொற்றுக்கு எதிரானது மனிதநேயம். அதில் நாம் ஒன்றாக இருக்கின்றோம். ஒன்றாகவே வெற்றியும் பெறுவோம் என ஜான்சன் கூறுவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
8 பில்லியன் டாலரை திரட்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ கான்பிரன்ஸ் மாநாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜெர்மனி, பிரிட்டன் , ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா, சவுதி அரேபியா, ஐரோப்பிய மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் ஆணையம் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. தடுப்பூசி நிதிக்காக பிரித்தானியா அளித்த நன்கொடை 926 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உலகப் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு கொண்டு வரவும் உதவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலக சுகாதார நிறுவனம் அதன் முக்கிய நடவடிக்கைக்காக 75 மில்லியன் பவுண்ட் பெரும் மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில் ஆகியோரால் நிறுவப்பட்ட சர்வதேச அமைப்பான காவிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வருடந்தோறும் 330 மில்லியன் பவுண்ட் வழங்க பிரிட்டன் உறுதி கூறியுள்ளது. இந்த அமைப்பு உலகில் இருக்கும் ஏழ்மையான மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளுக்கான தடுப்பூசி அணுகலை மேம்படுத்துகின்றது.