மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுபான கடைகளில் விற்பனையானது தற்போதிருந்தே அமோகமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மது வாங்க வருபவர்களிடம் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதில் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மது வாங்க வருபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் பணியாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் மது வாங்குபவர்கள் உடனடியாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.