தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இங்குள்ள பாலித்தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியுள்ள நிலையில் இன்று வரை நடைபெறும். இந்த மாநாட்டின் போது உக்ரைன் ரஷ்யா போர், போரினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டிஜிட்டல், உலக பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பிரதமரை சந்தித்து பேசினார்.
அப்போது சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடடோ மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு விருந்து வழங்கினார். இந்த விருந்தின் போது எதார்த்தமாக பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரடியாக சந்தித்துக் கொண்டனர்.
அப்போது இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கி பரஸ்பரமாக சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்பு யதார்த்தமாக நடந்ததே தவிர அதிகாரப்பூர்வமாக திட்டமிட்டு நடைபெறவில்லை. மேலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை, லடாக் பிரச்சனை போன்றவைகள் இருக்கும் போது இரு நாட்டு தலைவர்கள் பரஸ்பரமாக சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.