Categories
மாநில செய்திகள்

தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |