ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் விக்டோரியா ஆகும்.
இந்த மாநிலத்தில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக மீட்கபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் சுமார் 120 சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மக்கள் பலர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.