Categories
மாநில செய்திகள்

வருகிறது கனமழை!… 8 மாவட்ட மக்களே நீங்க பாதுகாப்பா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடைய கூடும் என்றும், பின் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கிழக்கு திசை காற்றின் மாறுபாடு வேகம் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் உள் கிழக்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |