Categories
மாநில செய்திகள் வானிலை

HEAVY ALART : இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகுது மழை….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |