Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா.. 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 698ல் இருந்து 738 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் வேலூரில் இன்று ஒருவர் கொரோனாவால் பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாகவும், 71 வயது முதியவர் உட்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |