Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிகரித்த தொந்தரவு…. தலைமையாசிரியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடன் தொந்தரவு அதிகமானதால் தலைமையாசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மகன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சொத்து வாங்குவதற்காக பலரிடம் இருந்து பெற்று கொண்ட கடன் தொகையை பாஸ்கரனால் திருப்பி செலுத்த இயலவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |