Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையை பார்த்துள்ளீர்களா…? வெளியான அழகிய புகைப்படம்…!!!

இயக்குனர் செல்வராகவன் தனது மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனும் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இயக்குனர் செல்வராகவன் தனது படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த அழகான திரையுலக தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இன்னிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது மூன்றாவது மகனை கையில் வைத்துக்கொண்டு அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த அழகிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |