அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரஷ்யா, எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியாவிற்கு விநியோகித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது.
மேலும், இதன் காரணமாக, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், இந்தியா அதனை மீறி, ரஷ்ய நாட்டிலிருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியிருக்கிறது. ஆனால், இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பதால் இந்தியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், அமெரிக்க அரசு, இந்த பிரச்சனையில் இந்தியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது.