Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா….. சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா – தெறிக்க விட்ட ஹர்பஜன்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார். 

ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸெல் 50* (44) ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 43* (45) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.  சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஹர்பஜன் சிங் சென்னை அணியின் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் தமிழில் ட்விட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார். “அதில் அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா தல வேட்டு #CSKvKKR அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி #CSK மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா” என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |