இந்தியாவில் சமீபகாலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டே சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வீதம் கச்சா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணையை வரியின்றி இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதனால் சமையல் எண்ணெய் விலை குறையும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
HAPPY NEWS: சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைவு?…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
