ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை, தமிழக அரசு ஏற்க்கக்கூடாது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் விளைநிலங்களை எண்ணெய் எரிவாயு போன்ற எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.