Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேலையா….? மார்ச் 9 முதல் H1B விசா…. பதிவு பண்ண மறக்காதீங்க…!!

அமெரிக்காவில் வரும் மார்ச் மாதம் 9 தேதி முதல் 2022 ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்கள் பதிவு தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணி புரிவதற்காக எச்1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விசாவில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதில் எச்1பி விசாக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை அட்டை உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளார். பின்னர் டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் எச்1பி விசாக்கள் ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். விசா ஒதுக்கீட்டில் குழுக்கள் முறைக்கு பதிலாக ஊதியம், தகுதி, பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்று உத்தரவை பிறப்பித்து மார்ச் 9ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார்.

அதன்பின் ஜோ பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை குழுக்கள் முறையே தொடரும் என்று ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு எச்1பி விசாகளுக்கான பதிவுகள் வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |