Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு தலைமை இயக்குனர் மீது பாலியல் குற்றசாட்டு….

அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதையடுத்து அங்கு கூடுதல் இயக்குனர்  விசாரணை மேற்கொண்டார்.

சுகாதார துறையில்  பொது சுகாதளராக பணிபுரியும் தயாளன் என்பவர் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணியிடமாற்றம் கோறுகையில் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்குவது முறையீட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற கூடுதல் இயக்குனர் மாலதி, செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை மேற்கொண்டார். அதனை  தொடர்ந்து இணை இயக்குனர் தயாளனிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |