ஜெர்மன் நாட்டின் ஒரு தேவாலயத்தின் முன்பு திடீரென்று ஆயுதங்களை ஏந்திய காவல்துறையினர் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெர்மனியில் இருக்கும் Hagen என்ற நகரின் யூத தேவாலயத்தின் முன் அதிகமான இயந்திர துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் குவிந்து நின்றுள்ளனர். அதாவது, யூதர்களுக்கான முக்கிய பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. எனவே, இரவு முழுக்க தேவாலயங்களில் வழிபாட்டிற்காக மக்கள் அதிகமாக கூடியிருந்துள்ளனர்.
இந்நிலையில், தேவாலயத்தில் தாக்குதல் நடத்தவுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அதிகமான காவல்துறையினர் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். எனினும், இந்த தேவாலயத்திற்கு யாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.