Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிசூடு தாக்குதல்…. தலீபான் கமாண்டர் உட்பட 6 பேர் பலி….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கமாண்டர் மற்றும் அவரின் மகன் உட்பட ஆறு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் பஞ்சம் நிலவுகிறது. இதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள கிழக்கு குனார் என்னும் மாகாணத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தலிபான்களின் கமாண்டர் மற்றும் அவரின் மகன் உள்பட சுமார் 6 நபர்கள் உயிரிழந்தனர். அந்நாட்டின் இஸ்லாமிய எமிரேட்டின் உளவுத்துறை அதிகாரிகள், இச்சம்பவத்தை உறுதி செய்திருக்கிறார்கள். மேலும், தனிப்பட்ட விரோதத்தால் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Categories

Tech |