Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. டான்ஸ் ஆடுனது குத்தமா….? திருமணத்தன்றே விவாகரத்து செய்த மாப்பிள்ளை….. என்ன பாட்டுன்னு தெரியுமா….?

ஈராக் நாட்டில் நான் அதிகாரம் செலுத்துவேன் என்னும் அர்த்தம் உடைய பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், திருமணத்தின் போது மணமகள், “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில், “நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் திமிர் பிடித்தவள்” என்று அர்த்தம் இருந்திருக்கிறது.

இந்த பாடலுக்கு மணப்பெண் நடனமாடியவுடன், மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண்ணின் குடும்பத்தாருடன் சண்டையிட தொடங்கினர். அதன்பிறகு, மணமகன் திருமணம் நடந்த அன்றே மணப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார்.

Categories

Tech |