நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
முன்னணி செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பரிவர்த்தனைகளுக்கு முன்பு கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கியது. ஆனால் இப்போது அவசியமற்ற கூப்பன்களை வழங்குகிறது. இன்னொரு பக்கம் phonepe கூட இப்படித்தான் செய்கிறது. மேலும், கொடுத்த கூப்பன்களை எப்படி யூஸ் செய்வது என்றும் சொல்வதில்லை. இந்த 2 ஆப்ஸும் வேஸ்ட் என்று பயனர்கள் கடும் கோபத்தில் புலம்பி வருகின்றனர்.