இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வினால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். மேலும் தகவலைப்படி முழு வரிக்கு உட்பட்டது என்பதால் நீங்கள் பெரும் அகவிலைப்படிக்கு வரி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.