தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் டெங்குவை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவை பார்த்தோமென்றால் முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் அதற்க்கு முன்னதாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பருவமழை வந்த பின்பு டெங்கு இன்னும் அதிகமாக பரவும் என்றும் அதை கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை உணர்ந்து நேற்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நாளைய தினம் வந்து வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுமென்றும் , அந்த நாளில் பள்ளிகள் , கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் , வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேங்கி இருக்க கூடிய நீரை சுத்தம் செய்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்க உறுதி செய்யவேண்டும். மேலும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்பவும் , சுகாதாரம் இல்லை என்றால் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.