Categories
பல்சுவை

“தங்கம் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை…

இன்று தங்கம் விலை அதிகரித்து உள்ளதால்  வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 104 அதிகரித்து  ரூ30,520 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 13 அதிகரித்து     ரூ 3,815க்கு விற்பனை செய்யப்படுகின்றது.  வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றுக்குரூ  49-க்கு விற்பனை செய்யபடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் விலை குறித்து கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |