Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு… கவலையில் வடிக்கையாளர்கள்..!!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்  

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் சில நாட்களாக குறைந்தது முன்னதாக 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 31, 008 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ 14 அதிகரித்து 3,876 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . அதேபோல் வெள்ளி கிராம் 30 காசுகள் அதிகரித்து 51.30க்கு விற்பனை செய்யபடுகின்றது.

Categories

Tech |