Categories
சினிமா தமிழ் சினிமா

“பாக்யாவின் அருமையை உணரும் கோபி”…. இன்றைய எபிசோடு இதோ…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடை பார்க்கலாம். பாக்கியாவின் மகனான எழில் எடுத்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலிடம் காதலை கூறுகின்றார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக மறுத்து விடுகின்றார்.

பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்து இருக்கின்றார். அப்போது கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதாகவும் இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும் நான்தான் சமைக்க போவதாகவும் மகிழ்ச்சியாக கூறுகின்றார். பின் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி நன்றாக இருப்பதாக அவரை பாராட்டுகிறார்கள்.

மற்றொரு பக்கம் கோபி ஆபிஸில் இருந்து வீட்டிற்கு வந்தபோது ராதிகா அவரை கண்டுகொள்ளவில்லை. கோபி ராதிகாவிடம் காபி கிடைக்குமா என கேட்டார். ஆனால் ராதிகா ஆர்டர் பண்ணிக்கோங்க என கூறிவிட்டு செல்கின்றார். பின் பசிக்கிறது எனக் கூறியபோதும் அதே பதிலை கூறுகின்றார்.

ஒரு வழியாக கிச்சனுக்கு சென்று சமைக்க ஆரம்பிக்கின்றார் ராதிகா. கோபி பக்கத்து வீட்டில் பாக்யா செய்த பிரியாணி வாசத்தை கண்டு ராதிகா தான் பிரியாணி செய்கின்றார் என நினைக்கின்றார். ஆனால் பழைய கஞ்சி போல் ஒன்றை கொண்டு வந்து கொடுக்கின்றார் ராதிகா. அதை பார்த்து கோபி மனதிற்குள் நம்பி ஏமாந்துட்டியே கோபி என புலம்புகின்றார். இதனுடன் இன்றைய எபிசோட் நிறைவு பெற்றது.

Categories

Tech |