Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம் இதே காரணத்தைக் கூறி ஒவ்வொருவரிடமும் 7 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் வேலையையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் தராமல் ஆறுமாதங்களுக்கு மேலாக ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மல்லபாடி கிராமத்திலிருந்த ஷீலா, திருமால் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக நாகராஜ் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |