திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்லபுத்தி வர வேண்டி இந்து மக்கள் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார். வேம்படி இசக்கியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக போராடி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தி வரவேண்டுமென வேண்டியும் கோயிலில் 101 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியில் சாதியை சித்தரித்து காமராஜர் படத்தை போடுவது கண்டனத்திற்குரியது” என்றார். மேலும், நெல்லை கண்ணன் நாக்கை அறுப்போம் என்று போஸ்டர் ஒட்டிய விவகார வழக்கை சட்ட பூர்வமாக சந்திப்போம் என்றார்.