Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உஷார் : 4 இலட்சம் கொடு … இல்லனா..! மிரட்டிய கல்லூரி மாணவன் … பயந்த போன மாணவி .!! – டிக் டாக் விபரீதம்

டிக் டாக் செயலி மூலம்  கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கல்லுரி மாணவிகளை  மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். டிக் டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

 

மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை சில வீடியோக்களில் நடிக்க வைத்து அவற்றை பதிவேற்றம் செய்துள்ளார். மாணவிகளுடன் சகஜமாக பேசுவது போல் நடித்து மாணவிகளுக்கு தெரியாமலும் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என அவர்களை மிரட்டி உள்ளார்.

ஒரு மாணவியிடம் 4 லட்சம் ரூபாய் வரை அவர் மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு கண்ணன் மற்றொரு மாணவியிடம் 2 லட்சம்  ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அதனால்  பயந்துபோன அந்த மாணவி பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் அளிக்க அதன் அடிப்படையில் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |