Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வி” இளம் பெண் எடுத்த முடிவு…. கைது செய்யப்பட்ட காதலன்….!!

காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் சரண்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் அண்ணாநகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று காலையில் சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யாவின் தற்கொலைக்கு காதலன் ஐசக் மனோஜ்குமார் தான் காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த புகாரின் பேரில் அசோக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Categories

Tech |