Categories
உலக செய்திகள்

தோழியை சீரழித்த சிறுவன்.. நாட்டையே புரட்டிப்போட்ட கொடூர சம்பவம்..!!

அர்ஜென்டினாவில் 17 வயது சிறுவன் தன்னுடன் பயிலும் சக மாணவியிடம் தவறாக நடந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவில் உள்ள Santiago del Estero என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மாணவி லூசியானா செக்வீரா(17). இவர் கடந்த 17 ஆம் தேதி அன்று நகல்களை எடுக்க தன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அன்று இரவே ரகசியமாக இயங்கி வந்த ஒரு ஓட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சில மணி நேரங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதயம் செயலிழந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் இருந்துள்ளது.

லூசியானாவின் கால் பகுதியிலும் முதுகிலும் தீயினால் சுட்ட காயங்கள் இருந்திருக்கிறது. அந்த  ஓட்டலின் ஊழியர்கள் லூசியானாவை, ஒரு சிறுவன் அழைத்து வந்தததாகவும் சிறிது நேரத்தில் அவர் மட்டும் தனியாக சென்றதாகவும் கூறியுள்ளனர். அச்சிறுவன் லூசியானாவுடன் பயிலும் சக மாணவர் என்று தெரியவந்தது.

எனவே காவல்துறையினர் அந்த மாணவனை கைது செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் அந்த கிராமத்தையே புரட்டிப் போட்டது. சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு ஆதரவு பெருகியது. லூசியானாவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அவரது தந்தை கூறுகையில், லூசியானா நல்ல படிக்கக் கூடியவர். கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. வருங்காலத்தில் காவல்துறை அதிகாரியாக விரும்பியதாக கூறி கதறி அழுதுள்ளார்.

Categories

Tech |