Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இவன் தான் அதை செஞ்சிருப்பான்…. கடத்தப்பட்ட இளம்பெண்… தவிப்பில் வாடும் பெற்றோர்…!!

பட்டதாரி இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, அதன் பின் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வினோதினி வந்து சேராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் புஷ்பராஜ் என்பவர் வினோதினியை கடத்தி சென்றது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |