Categories
உலக செய்திகள்

கேரளாவுக்கு செல்ல… விமான நிலையம் வந்த இளம்பெண்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்..!!

சொந்த நாட்டிற்கு திரும்ப நினைத்த மாணவி விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த ஜோஷ்-ஷெர்லி தம்பதியின் மகள் லிஜோ ஜோஸ் இவர் தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்காக 4 ஆண்டுகள் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிற்கு வந்த லிஜோ மீண்டும் தனது படிப்பைத் தொடர ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தென் கொரியாவிற்கு சென்றுள்ளார். கொரோனா காரணமாக லிஜோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நாட்களில் அவர் அதிக அளவு காது மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து தனிமைப்படுத்துதல் முடிவடைந்த பிறகு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் லிஜோவின் பிரச்சனை சரி ஆகவில்லை. இதனால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்து கேரளாவிற்கு டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். அதன்படி சென்ற வியாழன் மாலை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அச்சமயம் திடீரென அவர் மயங்கி விழ அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |