பெற்றோர் வீட்டு வேலை சரியாக பார்க்கவில்லை என கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சசிரேகா என்ற மகள் இருக்கிறார். இவர் திருமழிசை பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக பார்க்கவில்லை என அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சசிரேகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.