Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த இது தான் ஒரே வழி…. ஆலோசனை கூறும் ஜெர்மன் பிரதமர்…!!!

ஜெர்மன் பிரதமர், உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து சுமார் 115-ஆம் நாளாக போர் மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்ஸ் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம்.

உக்ரேன் நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நானும் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |