Categories
உலக செய்திகள்

“எத்தியோப்பியாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்!”…. மக்களை வலியுறுத்தும் பிரபல நாடு…!!

ஜெர்மன் அரசு, எத்தியோப்பியாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து, வெளியேற வலியுறுத்தியிருக்கிறது.

எத்தியோபியா நாட்டில், “திக்ரே மக்கள் விடுதலை முன்னணி” என்னும் அமைப்பு, அரசப்படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு நகரங்களை, இந்த அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தற்போது, அவர்கள் தலைநகரான அடிஸ் அபாபாவை நெருங்கியதாக கூறப்பட்டதால், ஜெர்மன் மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அந்நகரின், Addis Ababa Peace and Security Bureau என்ற பாதுகாப்பு அமைப்பின் தலைவர் Kenea Yadeta பிற நாடுகள் கூறுவது போல் இல்லை. அடிஸ் அபாபா நகர் அமைதியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், பிற நாடுகளின் தூதரக அலுவலர்கள், இது குறித்து அஞ்சவோ, வருத்தப்படவோ வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |