ஆண்கள் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஆண்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளதாக காமெடி பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இன்று கார்த்திகை திருநாள் என்பதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் விளக்கேற்ற வீட்டு வாசலில் அமர்ந்திருப்பர்.
தீப ஒளியில் அட்டு பிகர் கூட லட்டு மாதிரி தெரியும் என்பதால், அவர்களை கண்டவுடன் திருமணமாகாத ஆண்கள் காதலில் விழ வாய்ப்புண்டு. ஆகையால் அடுத்த 3 நாட்களுக்கு திருமணமாகாத ஆண்கள் மாலை நேரங்களில் வெளியில் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் அட்டு பிகர்களிடமிருந்து நமது லட்டு பசங்களை பாதுகாக்கவே இந்த அறிக்கை ஆண்கள் பாதுகாப்பு குழு சார்பாக வெளியிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.