கேஸ் ஊழியர் என்று கூறி போலி அடையாள அட்டை மூலம் பெண் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 21ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதுகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் தான் கேஸ் கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக கூறி தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார்.
வீட்டிலுள்ள கேஸ் இணைப்பை சரிபார்ப்பதற்காக தன்னை கேஸ் நிறுவனத்தினர் அனுப்பியுள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்பு வீட்லுள்ள கேஸ் இணைப்பை பார்த்து விட்டு இந்த இணைப்பில் பிரச்சனை உள்ளதாகவும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் கேஸ் வராது என்று கூறியுள்ளார். இதற்கு 7300 ரூபாய் உடனடியாக கொடுத்தால் நாளை சர்வீஸ் ஊழியரை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட முத்துகிருஷ்ணன் உடனடியாக 7300 ரூபாய் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் ஊழியர் வராததால் சந்தேகமடைந்த முத்துகிருஷ்ணன் கேஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் . அதற்கு கேஸ் நிறுவனத்தினர் அப்படி ஒரு ஊழியரை அனுப்பவே இல்லை என்று தெரிவித்துள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துகிருஷ்ணன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.